என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜஸ்தான் அமைச்சரவை"

    ராஜஸ்தானில் பதவியேற்ற 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவையில் 4 பேர் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரி அசோக் கெலாட்டுக்கும், முக்கிய தலைவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இதனால் ஏற்பட்ட மோதலை காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு சமாதானப்படுத்தியது.

    தனது ஆதரவாளர்களுக்கு மந்திரிசபையில் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சச்சின் பைலட் வலியுறுத்தி வந்தார். எனவே, ராஜஸ்தான் அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படும் என அசோக் கெலாட் தெரிவித்திருந்தார்.

    ராஜஸ்தான் மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் அனைத்து மந்திரிகளும் ராஜினாமா செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டதால், அனைவரும் ராஜினாமா செய்தனர்.

    இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் புதிய அமைச்சரவை இன்று மாலை பதவி ஏற்றது. புதிதாக 15 மந்திரிகள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் 4 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்நிலையில், ஜிதேந்திர சிங், பாபுலால் நகர், ராஜ்குமார் சர்மா, சன்யம் லோதா, ராம்கேஷ் மீனா மற்றும் டேனிஷ் அப்ரர் ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் முதல் மந்திரி அசோக் கெலாட் ஆலோசகர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    ராஜஸ்தான் மாநில அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து மந்திரிகளும் ராஜினாமா செய்துவிட்டு புதிய அமைச்சரவை அமைக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுடன் கடந்த ஆண்டு போர்க்கொடி தூக்கினார். இந்த மோதலால் கெலாட்டுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

    காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தியது. தனது ஆதரவாளர்களுக்கு மந்திரிசபையில் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். அது நிறைவேற்றப்படாததால் சச்சின் பைலட் அதிருப்தியில் இருந்தார்.

    அமைச்சர் பதவியேற்பு

    இதற்கிடையே ராஜஸ்தான் அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படும் என்று அசோக் கெலாட் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறி இருந்தார். இந்த பணிகளுக்காக காங்கிரஸ் பொதச்செயலாளர் அஞ்சய் மக்கான் ஜெய்ப்பூர் சென்றார்.

    ராஜஸ்தான் மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் அனைத்து மந்திரிகளும் ராஜினாமா செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைவரும் ராஜினாமா செய்தனர். புதிய அமைச்சரவை பதவி ஏற்பதற்காக அனைத்து மந்திரிகளும் பதவி விலகினர்.

    இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் புதிய அமைச்சரவை இன்று மாலை பதவி ஏற்றது. 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆட்சி பொறுப்பு ஏற்றப்பிறகு கெலாட் மந்திரிசபை முதல் முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். 11 பேர் கேபினட் மந்திரிகளாகவும், 4 பேர் இணை மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர். 12 பேர் புதுமுகங்கள் ஆவார்கள். அனைவருக்கும் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
    ×